28/12/2007

வேதனையின் விளிம்பில் நான் !!!


சிதைந்து போன...
உள்ளத்துஉணர்வுகளை
எல்லாம்சேர்த்து வைத்து
வேதனையின் விளிம்பில்-
நான்எழுதும் கவிதை இது ,...
பருவ வயது முதலே -இன்று
வரைதொடரும் அவலம் இது
கவலையே வாழ்வாக
கண்ணிரீ கதையாக -கொண்ட
என் உருக்குலைந்த
உள்ளத்தில் இருந்து-கிளர்ந்து எழும்பும்
உஷ்ண உணர்வு இது ..
அன்பும் - பண்பும் கொண்ட
நாயகன் வருவான் என ...!
உள்ளம் முழுக்க
எண்ணம் வளர்த்து ...
கனவுகளுடன் வாழ்ந்த
என் வாழ்வில் ....
அகம் பாவம் , ஆணாதிக்கம்...
சந்தேகம்கொண்ட ஒருவன்...
அதிரடியாய் பிரவேசிது
என் கனவுகளை கலைத்து...
உணர்வுகளை கொன்று
கேவலப்படுத்தி உள்ளத்தை
உருக்குலைத்து...!!!
ஊமையாய் அழ வைத்து
என்னை ஜடமக்கியதால்...!
நடை பிணமாய் நானும் -இன்று
நடமாடுகிறேன் ...!!!


17/12/2007


நாட்களும் வருடங்களும்
நகர்ந்து கொண்டு செல்கிறது -ஆனால்
நானோ ????

நடைப் பிணம் போல்
அலைந்து திரிகின்றேன் !!!

இவ் விடியலை நோக்கி
விடியும் நாள்
விடிவுக்குரிய நாளாகாது-என்று
எண்ணுகின்ற நாட்களெல்லாம்
ஏமாத்தம் என் வாழ்வில் !!!

என்று வசந்த காலம் துளிர் விடும்
அந்த நாளுக்காக...
காத்திருக்கும் காலங்கள்

கனவாகுமா ?????
நனவாகுமா ............என்று?
காலம்....... தான் பதில் சொல்லும்!!!....
Ny

13/12/2007


எதற்காக .....அன்பே !!!

என்னை கண்ணீரில்
கரைய வைத்து
கருனையற்றவனாய்
நீ சென்றாய்..???

சாம்பிராணி புகைபோல
பொங்கியெழும்
உன் ஞாபகங்கள் தான்
என் சிந்தை கலங்க வைக்கிறது!!!

நீயென் இதயத்தை
புரிந்து கொள்ளும் போது
நானிருப்பேன்..
புதைகுழிக்குள்..!!!

எழுதுகிறேன் ஒரு கவி


எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!

உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...

உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!

இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!