13/01/2008

பிரிவு




நீ என்னை விட்டுப் பிரிந்தாய் இன்று
அதனால் எனக்கு எதிலுமே பிரியமில்லை
உலகத்தில் நான் விரும்பியவையில்
முதல்மையானது உன் நட்பு..

ஏன் உன் பாசம் பாதியிலே
பறிபோகும் என்பதாலா ???
ஏன் என் மனதிற்கு புரியவில்லை
உன் பாசம் பாதியிலே
போவது தெரிந்து இருந்தால்
உனக்கு முன் பாவி நான் மாறியிருப்பேன்...

அன்பு காட்டியவர்கள் எல்லாம்
என்னை விட்டுப் பிரிந்த போதும்
நீ மட்டும் பிரியாமல் இருந்தாய் ...
அது நிரந்தர பிரிவுக்கு
அஸ்திவாரம் என்பதை அறியாமல் - இன்று
நிம்மதியின்றி நிமிடங்கள் கரைகிறது ...

உன்னை பிரிவதை நினைத்து
இன்றும் நான் அழுகிறேன்
நீயோ அழ வைத்து வேடிக்கை பார்க்கிறாய்
நான் சுத்தமாக சுவாசித்தது உன்னையும் - உன்
நினைவுகளையும் மட்டும் - ஏன்
மீண்டும் மீண்டும் விட்டுச் செல்கிறாய் .........???

12/01/2008

தவிப்பு




எத்தனையோ கனவுகள் எனக்குள்..
அத்தனையும் சுக்கு நூராகி
பித்தாக என்னை அலைய வைத்து
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு...???

தூக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில்...
ஆறுதல் சொல்ல ஆளின்றி ...
நானிங்கே தவிக்கிறேன் ...
ஆழமான என் காதலையும்
உன்னடிமையாகி போன என்னையும்
உன்னால் எப்படித்தான் மறக்க முடிந்தது ...???

அடிக்கடி காதல் மொழி பேசிய நம்
கையடக்கத் தொலை பேசிகள் -இன்று
நம்மைப் போலவே மௌனமாகிப் போயின ...!!!

உன் நினைவுகளால் நிறைந்திருந்த
என் நெஞ்சம் மட்டும் இன்று
பிரிவின் வேதனையில்
பரிதாபமாய் தவிக்கிறேன் ...!!!

உன்னருகாமையின்றி இனிமேல்
எப்படித்தான் வாழப் போகிறேனோ ???
இதயம் முன்னிலும் இருளாகிப் போனது
என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்
எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனது ...!!!

இருந்த போதும் ....
உன் நினைவுகள் தரும்
வேதனைகளில் வெந்தபடியே..
இன்று நான் வாழ்கிறேன் ....!!! NY