15/03/2008

உன் உறவு தான் என்ன ???


உயிரே...!!!
உனை நினைத்தேன்...
உயிர் துடித்தேன்
உலகில் ஆயிரம்
பேருண்டு - ஆனால்
உனைப்போல்
யாரும் இல்லை ...!!!

உறவுகள் பல
சுற்றிவரினும்
உன்மீது நான்
கொண்டது
காதலா???
நட்பா???
புரியவில்லை எனக்கு !!!

நீ உனது
காதலை என்னிடம்
மறைமுகமாக
நீ சொன்ன போது
உன்னை முதலில்
எனக்கு பிடிக்கவில்லை ...

காரணம் உன் அழகு
போதாது என்பதால்
அல்ல... !!!
ஆனால் இன்று
உன் அன்பு என்னை
ஈர்ந்து விட்டது ...!!!

எனவே உனது
அன்பை மறக்க
முடியாது -தினம்
உருக்குலைந்து
போகிறது
என் இதயம் ....!!!!

உயிரே உன்னை
சந்திக்கும் போது
பிரிவு ஏற்படுமென
நான் உணரவே இல்லை
உன்னை பிரிந்ததனால்
என் மனம் தவிக்கிறது....

உனை தினம் எதிர்
பார்த்து அந்த நாளுக்காக
உன் உறவு காத்திருக்கிறது ...

என்றோ ஒருநாள்
உறவு எதுவானாலும்
உன்னையும் என்னையும்
இணைக்கும் உறவு
அந்த ஆண்டவனுக்கு
மட்டுமே புரியும்...

உயிர் உள்ளவரை
தொடரட்டும் எம்
உறவுப்பாலம்
இப்பூமி மீது.. .. !!!


08/03/2008

இதயச் சுமை


என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...

சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்

சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை

என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...

ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!

கருத்த வானம் தான் நான்...!


கருத்த வானம்
மழை பொலியும்...
கருத்த என் வாழ்வில்
தூறல்கள் இல்லை...

சில்லென்று வரும் தென்றலும்
கொதிப்பாகவே இருக்கும் ...
பூவாகத்தான் இருந்தேன்
இன்று அனலாய் கொதிக்கின்றேன் ...

தட்டி கழித்த சமுதாயம்
எட்டி உதைத்த உறவுகள்
அழுத்திய காலங்கள்
கருத்த வானம் தான் நான்
ஆனால் தூறல்கள் இல்லை ...

வாழ்க்கை பற்றிய
நம்பிக்கையில்லை - ஆனால்
வேதனையின் பாரமும்
சோகத்தின் சுமையும்
மனதை வெறுமையாக்கும்
சம்பவமும் உண்டு ...

கருத்த வானம் தான் நான்
ஆனால் ...
தூறல்கள் இல்லை !!!