13/01/2008

பிரிவு




நீ என்னை விட்டுப் பிரிந்தாய் இன்று
அதனால் எனக்கு எதிலுமே பிரியமில்லை
உலகத்தில் நான் விரும்பியவையில்
முதல்மையானது உன் நட்பு..

ஏன் உன் பாசம் பாதியிலே
பறிபோகும் என்பதாலா ???
ஏன் என் மனதிற்கு புரியவில்லை
உன் பாசம் பாதியிலே
போவது தெரிந்து இருந்தால்
உனக்கு முன் பாவி நான் மாறியிருப்பேன்...

அன்பு காட்டியவர்கள் எல்லாம்
என்னை விட்டுப் பிரிந்த போதும்
நீ மட்டும் பிரியாமல் இருந்தாய் ...
அது நிரந்தர பிரிவுக்கு
அஸ்திவாரம் என்பதை அறியாமல் - இன்று
நிம்மதியின்றி நிமிடங்கள் கரைகிறது ...

உன்னை பிரிவதை நினைத்து
இன்றும் நான் அழுகிறேன்
நீயோ அழ வைத்து வேடிக்கை பார்க்கிறாய்
நான் சுத்தமாக சுவாசித்தது உன்னையும் - உன்
நினைவுகளையும் மட்டும் - ஏன்
மீண்டும் மீண்டும் விட்டுச் செல்கிறாய் .........???