15/07/2008

என் வாழ்க்கை


வாழ பிடிக்காத
தேசம்மொன்றில்
வாழ்கையை ....
இனியும் எப்படி
நினைப்பது !!

மரணத்தின்
நந்தவனதிக்குள் ...
மதியிழந்து
வாழ்க்கைக்கு ...
குட் பாய் [good bye]சொல்ல
சம்மதித்த பின் ....

உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து ...
கனவுகள் நிறைந்த
வசந்த தேசத்துக்குள்
வாழ்வது தெப்படியோ ????

நான்


விழியில் நனைந்து
இதயம் கரைந்து
இன்னலுக்கு மத்தியில்
இவ் வாழ்க்கையை கடக்கிறேன் .....

இரண்டு கண்களில்
காட்சி தோன்ற
இதயமோ வேதனைகளைச்
சுமந்த வண்ணம்
துக்க்கமின்றி துவண்டு
கனவுலகில் மிதக்கிறேன் ....

நெஞ்சத்தின் நெருடல்களை
நீண்ட நாட்களுக்குப் பின்பு
மீட்டிப் பாக்கின்றேன்
காயப்பட்ட நெஞ்சம்
கருகிப் போய் ஜடமாய்
உறங்குகின்றது ...!!!

கவலை மறந்து
தூக்கத்தை கொடுக்க
இதயத்தை அழைக்கிறேன்
அதுவும் உணர்வுகள்
இன்றி நடைப்பினமாய்
வேதனைகளை சுமக்கிறது ....

இப்படி ஒரு சோதனை
தேவை தானா எனக்கு ???
சொல்..........நெஞ்சமே .....சொல்
நீயும் என்னுடன் இணைந்து
மௌனத்தால் கொல்லாமல்
என் மேல் தயவு காட்டி
சொல் .............

ஞாபகங்கள் கவிதையாய்
உட்தெடுக்க
கன்னியவள் கண்
கலங்குகிறேன்
உன் வார்த்தைக்காக ...

14/07/2008

அது ஒரு பொற்காலம்


கல்லூரி செல்லும்
ஒவ்வொரு
காலை வேளையும்
இன்பங்கள் பொங்கியெழும்
கனவுகள் நிறைந்திருந்த
அதுவொரு பொற்காலம் .....
இதயத்தின் எந்த
மூலையில்
புதையுண்டு போனதோ ???
விம்மிப் புடைந்தநெஞ்சுக்குள்
அத்தனையும் துயரச் சுமைகள் தான் ..!!!