08/03/2008

இதயச் சுமை


என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...

சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்

சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை

என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...

ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!

கருத்த வானம் தான் நான்...!


கருத்த வானம்
மழை பொலியும்...
கருத்த என் வாழ்வில்
தூறல்கள் இல்லை...

சில்லென்று வரும் தென்றலும்
கொதிப்பாகவே இருக்கும் ...
பூவாகத்தான் இருந்தேன்
இன்று அனலாய் கொதிக்கின்றேன் ...

தட்டி கழித்த சமுதாயம்
எட்டி உதைத்த உறவுகள்
அழுத்திய காலங்கள்
கருத்த வானம் தான் நான்
ஆனால் தூறல்கள் இல்லை ...

வாழ்க்கை பற்றிய
நம்பிக்கையில்லை - ஆனால்
வேதனையின் பாரமும்
சோகத்தின் சுமையும்
மனதை வெறுமையாக்கும்
சம்பவமும் உண்டு ...

கருத்த வானம் தான் நான்
ஆனால் ...
தூறல்கள் இல்லை !!!