13/12/2008

இது என்ன வாழ்க்கை..




இது என்ன வாழ்க்கை
என்ன தவம் செய்து பிறந்து விட்டேன் ...
நின்மதி இழந்து நிதமும் நான் தவிக்கிறேன் ..
உள்ளதை உள்ளபடி
உண்மைகளையும்
சொல்ல முடியவில்லை
பேச மொழி தெரிந்தும்
உண்மைகள் என் பக்கம் இருந்தும்
சொல்ல மொழி தெரியவில்லை ..
என் வாழ்வில் ஏக்கம்...
வெறுப்பு ...கவலை ....
விரக்கதி ....
வேதனை நிறைந்து வழிகின்றன ...
சொல்ல ஒரு உறவும் இல்லை
சொல்லி அழ வழியும் இல்லை ..
என்ன தவம் செய்து பிறந்து விட்டேன் ...
ஒ தெய்வமே ...
எல்லாம் கொடுத்தாயே
அழகு ..அறிவையும் கொடுத்தாய்
ஆனால்
அழகானவாழ்வை கொடுக்க மறந்தது ஏன்..
இவை இரண்டயும்
ஏன் என் உயிரையும்
சேர்த்து நீயே எடுத்துகொள்..

அன்பே கொள்ளாதே ..


நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம்
உன் அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல் என்னும்
அம்புகளால் என்னை கொள்ள்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என் வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும் புரியாதவனாய் ... நீ ??

உன் நினைவுகளுடன்


பிரிவுகள்
தான் காதலின்
தண்டனையா ..???
காதல்
தோல்வியே
என்றும்வேதனையா..???

நானும் ....
இதய கதவை
தட்டி பார்த்தேன்
அவன் இறுக்கி
பூட்டி கொண்டான்..
திறக்க நானும்
நினைத்த போது
திகைத்து நின்றேன் ...

நாயகியாகிய ...
நான் வரும்
முன் நாடகமும்
முடிந்தது ..
இது தான் காதல்
காவியமா ...???

என் ஓவியம்
எழும் முன்
தூரிகையும்
உடைந்தது இது
தான் நியாயமா ...???

நிலவும் உதித்தது
பொழுதுகளும் விடிந்தது ...
என் வாழ்வு ஏனோ
இருண்டதாய் இன்றும்
உன் நினைவுகளுடன்

நான் ....


காதல் தேடி
வாழ்ந்தேன்
அன்று ...
அது கையில்
கூடி வந்த நேரத்தில்
பாக்க சென்றேன்
நான் பாக்கும்
முன் எத்தனையோ
லீலைகள்...????

காதல் செடியும்
வளர்த்தேன் அன்று
ஆனால்
பூ பூப்பதையும்
பாக்கவில்லை ...!!!
நான் ....
காதல் வரத்தை மட்டுமே
கேட்டுப் பார்த்தேன்
அவனோ
கொடுக்கவே இல்லை ..
காரணம் கேட்டேன் ..
காலம் சொல்லும்
என்றான்....
உணர்ந்தேன் நானும்

காளை முகத்தை
கடைசி வரை
நானும்
பாக்கவே இல்லை ...
இருந்த போது
ஏற்க்க மறுத்தான்
அது தான் அவன்
பிடிவாதம் ...
அவன் பிரிந்த போது
நான் பாக்க துடித்தேன்....
ஐயோ கொடுமைகள்

காதலித்து பார்


காதலித்து பார்
கண்ணீர் வரும்
இரவும் பகலாகும்
காதலிலே
தோத்து பார்
உன் நிழலும்
உன்னை வெறுக்கும்..

காதலித்து பார்
உன் காதலையும்
கொடுத்து பார்
உன் உயிரையும்
எடுத்து விடும் ...

காதலித்து பார்
காதலித்து காயம்
கண்டால் அது
என்றும்
வலிப்பது இல்லை ..

எம் காதலும்
காதலின் ஏக்கமும்
கல்லறை
வரை மட்டுமே ...

காதலின் புதை
குழியில் தெரிந்தே
புதைந்தேன்...