13/12/2007


எதற்காக .....அன்பே !!!

என்னை கண்ணீரில்
கரைய வைத்து
கருனையற்றவனாய்
நீ சென்றாய்..???

சாம்பிராணி புகைபோல
பொங்கியெழும்
உன் ஞாபகங்கள் தான்
என் சிந்தை கலங்க வைக்கிறது!!!

நீயென் இதயத்தை
புரிந்து கொள்ளும் போது
நானிருப்பேன்..
புதைகுழிக்குள்..!!!

எழுதுகிறேன் ஒரு கவி


எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!

உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...

உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!

இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!