23/02/2010

உன் கல்லறை(யருகில்)


அறியாத வயது ..புரியாத பருவம்
காதலின் அர்த்தம் புரியா சிறு சிசு
உன் கண்கள் பேசிய..
உன் உதடுகள் சொன்ன...
காதல் மொழி தெரிய வில்லை ...!!

அன்னையே என் உலகம் ஆனதால்
அவர் சொல்லை மீறவில்லை
பெரியோரின் தவறுக்கு சிறு பிள்ளை
எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய் ..
விளையாட்டு பிள்ளை போல அன்று ..
இன்று விதி விளையாட்டின் கை பொம்மை நான்

நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம் என் கை சேரட்டும் ..!!!

நீ என்னோடு வாழ நினைத்த போது
வாழ்க்கை என் கையில் இல்லை ..
நான் உன்னோடு வாழ நினைத்த போது
நீ என்னோடு இல்லை ..
என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே ..
இல்லையே மண்ணோடு என்றாய் ..
சொன்னதை செய்து முடித்த புனிதன் நீஆனாய்
உன்னருகில் வாழத்தான் எனக்கு வாய்ப்பில்லை
உன் கல்லறை அருகில் உறங்கயேனும்
இடம் கொடுத்து விடு..!!

3 comments:

thina said...

these are not words this is a real pain of the love

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சோபி said...

Thina Thank you so much