13/12/2007

எழுதுகிறேன் ஒரு கவி


எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!

உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...

உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!

இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!

6 comments:

Vishnu... said...

மறு ஜென்மம் மானிடராய்......
செல்வத்துடன்...........
பிறந்து விட்டால்............
உன் அன்பை.............
பணம் கொடுத்து வாங்குவேன்...............

வேதனையின்
விதும்பல்களை
கவிதையாக்கி விட்டீர்கள் ...
காலம் கனியும்
வேதனைகள் மாறும்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

சோபி said...

மிக்க நன்றி தோழா......
காலம் கனியும் என்ற நம்பிக்கையோடு தான் இன்னமும் வாழ்கிறேன்


என்றும் அன்புடன் அன்பு தோழி நந்தினி

இனியவள் said...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்....


அருமையான கவி வரிகள்!!
உங்கள் அன்புக்காக வடித்தீயே ஒரு கவியை,அழகு !!!

அன்பின் ஆழம் பிரிகின்றது!!
வாழ்த்துக்கள்

சோபி said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இனியவளே!!!

என்றும் அன்புடன்
அன்பு தோழி
நந்தினி

தமிழ் said...

அருமையான வரிகள்

சோபி said...

nanri thikalmilir