12/01/2008

தவிப்பு




எத்தனையோ கனவுகள் எனக்குள்..
அத்தனையும் சுக்கு நூராகி
பித்தாக என்னை அலைய வைத்து
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு...???

தூக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில்...
ஆறுதல் சொல்ல ஆளின்றி ...
நானிங்கே தவிக்கிறேன் ...
ஆழமான என் காதலையும்
உன்னடிமையாகி போன என்னையும்
உன்னால் எப்படித்தான் மறக்க முடிந்தது ...???

அடிக்கடி காதல் மொழி பேசிய நம்
கையடக்கத் தொலை பேசிகள் -இன்று
நம்மைப் போலவே மௌனமாகிப் போயின ...!!!

உன் நினைவுகளால் நிறைந்திருந்த
என் நெஞ்சம் மட்டும் இன்று
பிரிவின் வேதனையில்
பரிதாபமாய் தவிக்கிறேன் ...!!!

உன்னருகாமையின்றி இனிமேல்
எப்படித்தான் வாழப் போகிறேனோ ???
இதயம் முன்னிலும் இருளாகிப் போனது
என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்
எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனது ...!!!

இருந்த போதும் ....
உன் நினைவுகள் தரும்
வேதனைகளில் வெந்தபடியே..
இன்று நான் வாழ்கிறேன் ....!!! NY

2 comments:

oviyan said...

இவ்வளவு காலம் காத்திருந்த நீ , இனி ''காத்து'' இரு உன் நினைவுகள் அழியாமல்...

என்ன என்றால் எங்கள் கூடவே சாகும் வரை வருவது எங்கள் இனிய நினைவுகள் மட்டுமே
எவராலும் தர முடியாத இன்பத்தை தருவதும் எங்கள் நினைவுகளே ....
என்றும் அன்புடன்
-:ஓவியன்:-

சோபி said...

உங்கள் வருகைக்கு
எனது நன்றிகள் ஒவியனே.......


அன்புடன் தோழி
நந்தா