08/03/2008

கருத்த வானம் தான் நான்...!


கருத்த வானம்
மழை பொலியும்...
கருத்த என் வாழ்வில்
தூறல்கள் இல்லை...

சில்லென்று வரும் தென்றலும்
கொதிப்பாகவே இருக்கும் ...
பூவாகத்தான் இருந்தேன்
இன்று அனலாய் கொதிக்கின்றேன் ...

தட்டி கழித்த சமுதாயம்
எட்டி உதைத்த உறவுகள்
அழுத்திய காலங்கள்
கருத்த வானம் தான் நான்
ஆனால் தூறல்கள் இல்லை ...

வாழ்க்கை பற்றிய
நம்பிக்கையில்லை - ஆனால்
வேதனையின் பாரமும்
சோகத்தின் சுமையும்
மனதை வெறுமையாக்கும்
சம்பவமும் உண்டு ...

கருத்த வானம் தான் நான்
ஆனால் ...
தூறல்கள் இல்லை !!!

2 comments:

Anonymous said...

தட்டி கழித்த சமுதாயம்
எட்டி உதைத்த உறவுகள்
அழுத்திய காலங்கள்
கறுத்த வானம் தான் நான்
ஆனால் தூறல்கள் இல்லை ...


நியத்தை உரைத்த உனக்கு எனது நன்றிகள்
Oviyan

சோபி said...

*இவை யாவும் நான்
சந்திதவை என் வாழ்வில் *

நன்றி ஓவியன் உங்கள வருகைக்கு


என்றும் அன்புடன்
அன்பு நந்தா