13/12/2008

உன் நினைவுகளுடன்


பிரிவுகள்
தான் காதலின்
தண்டனையா ..???
காதல்
தோல்வியே
என்றும்வேதனையா..???

நானும் ....
இதய கதவை
தட்டி பார்த்தேன்
அவன் இறுக்கி
பூட்டி கொண்டான்..
திறக்க நானும்
நினைத்த போது
திகைத்து நின்றேன் ...

நாயகியாகிய ...
நான் வரும்
முன் நாடகமும்
முடிந்தது ..
இது தான் காதல்
காவியமா ...???

என் ஓவியம்
எழும் முன்
தூரிகையும்
உடைந்தது இது
தான் நியாயமா ...???

நிலவும் உதித்தது
பொழுதுகளும் விடிந்தது ...
என் வாழ்வு ஏனோ
இருண்டதாய் இன்றும்
உன் நினைவுகளுடன்

No comments: